மாகாணசபை தேர்தலை இலங்கை அரசாங்கம் நடத்தும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லையென நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தெவிநுவர பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தேர்தல் பற்றி கூறுகின்ற போதே அரசாங்கம் அச்சம் அடைகிறது எனவும், மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் தமது அணி பாரிய வெற்றியை பெறும் எனவும் மகிந்த ராஜபக்ச இதன்போது குறிப்பிட்டுள்ளார்.