முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கை அரசியலில் இராணுவத்தின் தலையீடு அதிகரித்து வரும் அபாயம் உள்ளது என்று பேராசிரியர் இராமு. மணிவண்ணன் எச்சரித்துள்ளார்

591

இலங்கையின் முன்னாள் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் அதிகாரத்திற்கு வந்தால் நாடாளுமன்றம் இயங்காது என்று சென்னைப் பல்லைக்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல்துறை பேராசிரியர் இராமு மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பம் தொடர்பாகவும், அதன் போக்கும் தொடர்பிலும் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிங்களப் பேரினவாதம் தான் பெரும்பான்மையானது எனவும், அது முழுமையான பேரினவாத அரசியலை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் விபரித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க பிரதமராகவில்லை என்றால் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும், எனினும் தேர்தல் நடத்தப்பட்டால் சிங்களப் பேரினவாதம் பெரும்பான்மையை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மற்றொரு புறத்தில் அரசியலமைப்பை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கும், அதனை தக்க வைத்துக் கொள்வதற்கும் இராணுவத்தினரின் உதவியை கேட்கவேண்டிய கட்டாயமும் இருக்கிறது என்றும், மிக மிக அண்மையில் இலங்கை அரசியலில் இராணுவம் பங்காற்ற வேண்டிய நிலைக்குல் சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *