முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

இலங்கை உள்ளிடட நாடுகளின் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கும் 39ஆவது ஐ.நா மனித உரிமைகள் பேரவை இன்று ஆரம்பமாகியுள்ளது

841

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று ஆரம்பமான இந்த மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது.

இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட நாடுகள் குறித்த நூற்றுக்கணக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இன்றைய முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மைக்கேல் பசேல் ஜெரியா, இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்பதுடன், இலங்கை அரசின் தாமதம் தொடர்பில் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *