இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று மதியம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது இந்தியா-இலங்கை நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் வர்த்தகம், முதலீடு மற்றும் கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியப் பிரதமருடனான இந்த சந்திப்புக்கு முன்னராக இந்திய வெளிவிவகார அமைச்சர், உள்துறை அமைச்சர், எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்டவர்களுடனும் இலங்கைப் பிரதமர் சந்திப்புக்களை நடாத்தியுள்ளார்.