இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மூன்று விடயங்கள் உள்ளடங்கிய ஆறு தமிழ் கட்சிகளினால் கைச்சாத்திடப்பட்ட மனுவே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவேண்டும், சர்வதேச தீர்ப்பாயம் ஒன்று நியமிக்கப்படவேண்டும என்று இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 30-1 மற்றும் 34-1 ஆகிய தீர்மானங்கள் அமுல்படுத்தப்படுவதை கண்காணிக்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் ஒருவர் நியமிக்கப்படுவதுடன் அவர் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.