செங்கடலில் யேமனுக்கு அப்பால் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த, ஈரானிய சரக்கு கப்பல், குண்டு வெடிப்பினால் சேதமடைந்துள்ளது.
ஈரானிய புரட்சிகர காவல் படையினால் இந்தக் கப்பல் உளவுப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தது என்பதை ஈரானிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
செவ்வாய்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில், கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ள போதும், யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஈரான் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இந்தக் கப்பலின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக நியூயோர்க் ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆயினும், இஸ்ரேலிய அதிகாரிகள் இதுகுறித்து கருத்து எதையும் வெளியிட மறுத்திருப்பதாக பிபிசி செய்தி கூறுகிறது.