ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றினால், 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஈரானில் மொத்தமாக 60ஆயிரத்து 73பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொணட 15ஆவது நாடாக விளங்கும் ஈரானில், இதுவரை 16இலட்சத்து 31ஆயிரத்து 169பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 13இலட்சத்து 93ஆயிரத்து 125பேர் பூரண குணமடைந்துள்ளனர்.