ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்காக, இப்ராஹிம் என்பவர் 50 மில்லியன் ரூபாவை நிதி உதவியாக வழங்கியிருந்தார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் நடத்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குண்டுத் தாக்குதலை நடத்துவதற்காக இப்ராஹிம் 50 மில்லியன் ரூபாரவ செலவிட்டார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த நிதியில் 30 மில்லியன் ரூபா சஹ்ரானிடமும் அவரது நண்பர்களிடம் இருந்தன.
தாக்குதலில் சம்பந்தப்பட்ட சந்தேகநபர்கள் எவருக்கும், எந்த விதத்திலும் அரசாங்கம் நிதி உதவியை வழங்கவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடைநிறுத்தப்படவில்லை.
குற்றவாளிகள் மீது குறுகிய காலத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
தீவிரவாதிகளின் கொள்கைகளை பரப்புவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.