எந்த காலப்பகுதியிலும் உசைன் போல்டே சிறந்த தடகள வீரராவார் என தெரிவித்த சர்வதேச தடகள கூட்டமைப்பின் தலைவர் செபஸ்ரியன் கோ, உசைன் போல்ட் ஒரு மேதை என்றும் வர்ணித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கக் கூட்டத்தின் நிறைவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்த அவர், ”எட்டு முறை ஒலிம்பிக் சம்பியனான உசைன் போல்ட், லண்டனில் நடைபெறவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டிகளுடன் விடைபெறுகிறார். அவரது ஓய்வானது பேரிழப்பாகும்.
எனினும், போல்ட் இளைஞர்களிடையே விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு உதவிபுரிவார் என்பதில் ஐயமில்லை” என்றார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள உலக சம்பியன்ஷிப் போட்டியில் போல்ட், 100 மீற்றர் ஓட்டப்போட்டி மற்றும் 4×100 தொடர் ஓட்டப்போட்டி ஆகியவற்றில் பங்குக் கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.