உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சசிகலா பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் தண்டனை காலம் வரும் 27ஆம் நாள்யுடன் முடிவடையவுள்ள நிலையில், அவருக்கு இன்று பிற்பகல் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே சசிகலா மேல் சிகிச்சைக்காக பெங்களூரு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதால், சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதும், அவருக்கு தொற்று இல்லை என்று பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
இதையடுத்து அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.