சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் இந்த சுழற்சி முறையிலான தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும், தமிழர்களின் சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியும் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வருகிறது.
இந்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் பலரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.