யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தமக்கான நியமனத்தை மீள வழங்கக் கோரி, வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள், இன்று 8 ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இவர்களின் போராட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளாத நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டு வந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி என்ற பெண்ணின் உடல்நிலை இன்று திடீரென மோசடைந்துள்ளது.
இதையடுத்து அவர், அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.