முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

உருத்திரபுரீஸ்வரர் ஆலய போராட்டத்தை தடுக்க காவல்துறை நீதிமன்றம் ஊடாக முயற்சி..

264

கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தின் அகழ்வு நடவடிக்கைக்கு எதிராக, நடத்தப்பட்டு வரும் போராட்டத்தை நீதிமன்றத் தடை உத்தரவின் மூலம், தடுப்பதற்கு சிறிலங்கா காவல்துறையினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.

கிளிநொச்சி – உருத்திரபுரீஸ்வரர் ஆலய வளாகத்தில், தொல்பொருள் திணைக்களம் அகழ்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு எதிராக, அப்பகுதி மக்கள் கடந்த 24ஆம் நாள் தொடக்கம் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் போது, பொதுத்தொல்லை ஏற்படுத்தப்பட்டதாக ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த மூவரின் பெயர் குறிப்பிடப்பட்டு, குற்றவியல் நடவடிக்கை கோவையின் 106 ஆம் பிரிவின் கீழ், போராட்டத்துக்கு தடை விதிக்குமாறு கோரி, கிளிநொச்சி நீதிமன்றத்தில் சிறிலங்கா காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிபதி த.சரவணராஜா முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அதனைத் தள்ளுபடி செய்து நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு தடை விதித்து விட்டு தொல்பொருள் திணைக்களத்தின் அதிகாரிகளை அகழ்வில் ஈடுபட அனுமதிக்கும் வகையிலேயே சிறிலங்கா காவல்துறையினர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *