முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எக்குவடோரிய கினியாவில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது

191

மத்திய ஆபிரிக்க நாடான எக்குவடோரிய கினியாவில் இராணுவத் தளம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது.

கடலோர நகரமான பட்டாவில் (Bata) உள்ள  கொன்ரோமா  (Nkoantoma) என்ற இராணுவத் தளத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 20  பேர் உயிரிழந்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகின.

எனினும், இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளதாகவும்,  , சுமார் 615 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

டைனமட் வெடிபொருளைக் கையாளுவது தொடர்பான “அலட்சியம்” தான் பேரழிவிற்கு காரணம் என்றும், வெடிப்புகள் பட்டாவில் உள்ள அனைத்து வீடுகளையும் கட்டிடங்களையும் சேதப்படுத்தியதாகவும் நாட்டின்  ஜனாதிபதி  தெரிவித்துள்ளார்.

இதனால் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் வசிக்கும் பட்டா நகரில் ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *