எடின்பரோ கோர்ட் (Edinborough Court ) பகுதியில் மகிழுந்து ஒன்று வீடு ஒன்றின் மீது மோதிய சம்பவம் தொடர்பாக ரொறன்ரோ காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்கு பேர் அந்த வாகனத்தில் பயணம் செய்தனர் என்றும் அவர்களில் பெண் ஒருவர் சிறியளவில் காயமடைந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் வீட்டின் சாளரத்தின் அடிப்பகுதி நொருங்கியுள்ள போதும், வீட்டின் கட்டுமானத்துக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.