முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன

587

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்ட தேர்தல் அறிக்கைகளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெளியிட்டுள்ளன.

வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் ஆயிரத்து ஐந்நூறு ரூபா வழங்கும் அம்மா வறுமை ஒழிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை தேவையெனவும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, திராவிட முன்னேற்றக் கழக அறிக்கையில் தமிழ் இணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்படுமெனவும், மத்திய அரசின் வரி வருமானத்தில் 60 சதவீதம் மாநிலங்களுக்கு வழங்கப்படுமெனவும், ஈழத் தமிழ் ஏதிலிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுமெனவும், பேரறிவாளன் உட்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *