சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்திலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்துக்கு முன்பாக, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இந்தப் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அவர்கள், தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.