ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றவியல் விசாரணை அறிக்கை மற்றும் தகவல்கள் முழுமையானவை இல்லை என சட்டமா அதிபர் காவல்துறைமா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாளர் நிஷாரா ஜயரத்ன இதனை தெரிவித்தார்.
இதற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு தாமதமின்றி தகவல்களை சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபர், காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமைச்சரவை பேச்சுவார்த்தை ஒன்று விரைவில் இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார்.