முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ.எஸ் அமைப்பில் இருந்த கனேடியர் பலி!

1058

ஐ.எஸ்.ஐ.எஸ் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்பட்ட கனேடியர் ஒருவர் 2015 ஆம் ஆண்டில் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பினை பேணியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அவர், இரண்டு ஆண்டுகளின் முன்னரே மேசூல் நகரில் உயிரிழந்து விட்டதனை அமெரிக்க அதிகாரிகள் தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கனேடியரான ஃபாரா மொஹமட் ஷிர்டோன் என்று அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அந்த நபர் கடந்த 2015ஆம் ஆண்டு யூலை மாதத்தில் கொல்லப்பட்டு விட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடத்தின் தொடர்பாடல் இணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐ.எஸ் அமைப்புடன் இணைந்து சிரியாவில் போரிடுவதற்காக அவர் கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்கரியில் இருந்து புறப்பட்டுச் சென்று்ளளதாகவும், அவர் அமெரிக்காவின் மிகவும் தீவிரமாக தேடப்படும் பயங்கரவாதிகள் படடியலில் இருந்துவந்த நிலையிலும் தற்போது இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அந்த நபர் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய போராளியாகவும், அந்த அமைப்புக்கான நிதி சேகரிப்பாளராகவும், ஆட்சேர்ப்பு நபராகவும் செயற்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் விபரித்துள்ளனர்.

இவருக்கு எதிராக கனேடிய மத்திய காவல்துதறையும் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் பயங்கரவாதம் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

ஐ.எஸ் அமைப்பு வெளியிட்ட காணொளிப் பதிவு ஒன்றில், குறித்த அந்த கனேடியர் தனது கனேடிய கடவுச் சீட்டினை எரிப்பதை காட்டும் காட்சிகள் இடம்பெற்றதை அடுத்தே, அவர் மீதான நடவடிக்கைகள் மு்னனெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *