முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஐ.நா. தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை

213

சிறிலங்கா மீது முன்வைக்கப்பட்டுள்ள ஐ.நா. தீர்மானம் பொறுப்புக்கூறல் முயற்சிகளில் உதவக்கூடியதாக இல்லை என்றும் அரசியல் நோக்கம் கொண்டவை என்றும் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஐ.நா. தீர்மானம் கடந்த காலங்களில் சிறிலங்காவின் மனித உரிமை விடயங்களின் முன்னேற்றங்களைப் புறக்கணிப்பதாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீர்மானத்தை முன்வைத்துள்ள நாடுகள் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இந்த அரசாங்கத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறிலங்காவில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய உறுப்பு நாடான இலங்கைக்கு எதிராக பிரிட்டனின் நடவடிக்கைகளுக்கு அவரது அதிருப்தியையும் வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா மீது ஒரு தீர்மானத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கும் பிரிட்டன் தலைமையிலான நாடுகள், அது சரியானதா அல்லது தவறானதா என்பது குறித்து கவலைப்படவில்லை என்றும் தினேஷ் குணவர்தன குற்றம்சாட்டியுள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *