பைசர் மற்றும் பயோ என்டெக் மருந்துகளுக்கான கொள்வனவு அளவு குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து ஜேர்மன் மற்றும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பூசி தொடர்பில் மீளாய்வை நடத்துவதற்கு கனடிய விஞ்ஞானிகள் முஸ்தீபு செய்து வருகின்றனர்.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி செலுத்தும் நெருக்கடியிலிருந்து மீள்வது தொடர்பில் அவர்கள் தீவிர ஆலோசனைகளையும் நடத்தி வருகின்றனர்
இதேவேளை, கொள்வனவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த் தலைமையிலான குழுவொன்றும் தடுப்பூசி கொள்வனவு தொடர்பான கலந்தரையாடல்களை நடத்திவருகின்றது.
இதன்போது, பைசர் நிறுவனம் தனது உற்பத்தி தொழிற்சாலை விரிவாக்கம் தொடர்பில் தகவல்களை பகிர்ந்துள்ளது.
அத்துடன் சில உத்தரவாதங்களையும் அளித்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.