சிறிலங்காவில் கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளனர் என்று, காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோஹண தெரிவித்துள்ளார்.
டிசெம்பர் 20ஆம் நாளில் இருந்து இன்று வரையான காலப்பகுதியில், 527 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகலும், இதில் 39 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் 122 பேர் விபத்துக்களில் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும், மேலும் 238 பேர் சிறியளவிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும், காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
முச்சக்கர வண்டி சாரதிகள், உந்துருளியில் பயணம் செய்வோர் மற்றும் பாதசாரிகளே விபத்துக்களில் அதிகளவில் உயிரிழப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.