ஒன்ராரியோவில் வீட்டுக்குள் தங்கியிருக்கும் உத்தரவினை முறையாக கடைப்பிடிக்குமாறு பொதுச்சுகாதார ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அண்மைய நாட்களில் சராசரியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்ற நிலையிலேயே அவர்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த முடக்கல் நிலைமையினால் தான் ஒன்ராரியோவின் பாரிய பாதிப்புக்கள் தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒன்ராரியர்கள் சமூகப்பொறுப்புடன் இதுவரைநாளும் நடந்திருக்கின்றார்கள் என்றும் எஞ்சிய முடக்கல் காலத்தினையும் அவ்வாறே பின்பற்ற வேண்டும் என்றும் பொதுசுகாதார ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.