ஒன்ராறியோவில் அடுத்த வாரம் பொருளாதாரச் செயற்பாடுகள் படிப்படியாக மீளத் திறக்கப்படும் என்று, கனடியன் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்ராறியோவில் கொரோனா வைரஸ் தொற்று குறையத் தொடங்கியுள்ள நிலையில், இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அவசரகால நிலை வரும் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டபடி காலாவதியாகும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட் வரும் திங்கட்கிழமை அறிவிப்பார் என்றும், அரசாங்க வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.