ஒன்ராரியோ மாகாணத்தில் ஆயிரத்து 468பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளிலேயே இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் இக்காலப்பகுதியில் 11 மரணங்களும் சம்பவித்துள்ளதாக பொதுசுகாதாரத்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 138ஆக உயர்வடைந்துள்ளது.