ஒன்ராறியோவில் நேற்று 3128 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், 51 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ரொறன்ரோவில், 778 பேருக்கும், பீல் பகுதியில் 614 பேருக்கும் நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உயிரிழந்த 51 பேரில் 22 பேர் நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் இருந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 840 ஆக அதிகரித்துள்ள நிலையில், 1347 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 245 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஒன்ராறியோ சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.