முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

ஒன்ராறியோவில் மீண்டும் முடக்க நிலை?

226

ஒன்ராறியோ மாகாண அரசாங்கம் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, முடக்க நிலையை மீண்டும் அறிவிக்கவுள்ளதாக, CTV News செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் டக் போர்ட், இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 3ஆம் நாள் தொடக்கம் இந்த முடக்க நிலைய தொடங்கும் என்றும், கூறப்படுகிறது.

இதன்போது குடும்ப உறுப்பினர்கள் மாத்திரம் பங்கேற்கும் உள்ளக நிகழ்வுகள் மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், வெளிப்புற நிகழ்வுகள் 5 பேருக்குள் மட்டுப்படுத்தப்படும் என்றும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம், இறுதிச்சடங்கு, மற்றும் மத நிகழ்வுகள், உள்ளக கொள்ளளவில் 15 சதவீதத்தினருடன், மட்டும், நடத்த அனுமதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *