ஒன்ராரியோவின் பொது சுகாதார பிராந்தியங்களில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பாடாசாலைகளை மூட மாகாணம் உத்தரவிட்டுள்ளது.
வின்ட்சர், பீல், ரொறொன்ரோ, யோர்க் மற்றும் ஹாமில்டனின் பொது சுகாதாரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் பெப்ரவரி 10ஆம் திகதி வரை நேரில் கற்றலுக்காக திறக்கப்படாது என்று முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
ஒன் ராரியோவின் தலைமை சுகாதார அலுவலர் மாகாணத்தின் எஞ்சிய பொது சுகாதாரப் பகுதிகளில் தரவுகளை ஆராய்ந்து ஜனவரி 20ஆம் திகதிக்குள் அவர்களின் பாடசாலைகளுக்கான பரிந்துரைகளை வழங்குவார் என்றும் முதல்வர் ஃபோர்ட் கூறினார்.
தெற்கு ஒன்றாரியோவில் பாடசாலை மூடல்கள் ஜனவரி 25ஆம் வரை நடைமுறையில் உள்ளந்து. இருப்பினும், வடக்கு ஒன்றாரியோவில் உள்ள மாணவர்கள் ஜனவரி 11ஆம் திகதி பாடசாலைக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.