ஒரேயொரு ஏவுகணை மூலம் அமெரிக்க கடற்படைக் கப்பலை தகர்த்து எறிய முடியும் என ஈரான், அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவுடன் இணக்கப் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை என ஈரானிய புரட்சி படையினர் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
மத்திய கிழக்கு கடற்பரப்பில் யுத்த விமானங்களை தாங்கியவாறு வரும் கப்பலை ஒரே ஏவுகணை மூலம் தாக்கியழிக்க முடியும் என ஈரானிய கடும்போக்குவாத தரப்புக்கள் பகிரங்கமாக அறிவித்துள்ளன.
ஈரானிய அரசாங்கம் அnமிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என அந்த தரப்புக்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அணுத் திட்டம் குறித்து ஈரானிய தலைமைகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அண்மையில் அமெரிக்க அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் கருத்து வெளியிட்டிருந்தார்.