பூமிக்கும் சூரியனுக்கும் இடையே நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும் இதனையே சூரிய கிரகணம் என அழைப்பர். இதில் முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உண்டு.
இந்த நிலையில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசா அறிவித்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் 99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் இதுவாகும்.
சூரிய கிரகணத்தை பார்க்க உள்ள மக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளது. அதன்படி, ஓகஸ்ட் 21இல் தோன்றவுள்ள முழு சூரிய கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதை வெற்றுக் கண்களால் பார்க்கக் கூடாது என்றும் அதற்கென பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா அறிவுறுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 30 கோடி மக்களால் இந்த கிரகணத்தை பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.