முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா நாளை காலை

333

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்தத் திருவிழா நாளை காலை இடம்பெறவுள்ளது.

இந்தத் திருவிழா, இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாவதுடன் திருச் செரூப செபமாலையும் அதனைத் தொடர்ந்து திருப்பலியும் ஒப்புக் கொடுக்கப்படும். அத்துடன் நாளை காலை திருவிழா திருப்பலி கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது.

இந்நிலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து மக்கள், படகுகள் மூலம் கச்சதீவை நோக்கி இன்று மதியம் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.

தலைமன்னார் கடற்கரையில் கடற்படையினர் குடும்பப் பதிவுகளை மேற்கொண்டு சோதனை நடவடிக்கைகளின் பின்னர் படகுகள் மூலம் பயணமாகியுள்ளனர்.

தலைமன்னார், மன்னாரின் பல்வேறு கிராமங்களில் இருந்தும் மக்கள் கச்சதீவுக்குப் பயணமாகியுள்ளனர். இதேவேளை, கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாருக்குத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அதிகாரிகள் பக்தர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கச்சதீவு அந்தோனியார் வருடாந்த உற்சவத்திற்கு இம்முறை யாழ்ப்பாணம் குறிகட்டுவான் இரங்கல் உரையில் இருந்து தற்போது வரை 2500 பக்தர்கள் கச்சத்தீவு நோக்கி பயணித்துள்ளதாகதாக இலங்கை கடற்படையின் குறிகட்டுவான் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று காலை 8 மணிமுதல் யாழ். குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் இருந்து குறித்த மக்கள் படகுகள் மூலம் கச்சத்தீவுக்கு பயணமாகி உள்ளதாகவும் அதற்குரிய ஏற்பாடுகளை கடற்படை மற்றும் மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *