‘கஜா’ புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் சென்றுள்ள மத்தியக் குழுவினர் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதன்போது அமைச்சர்கள் உதயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் துறை சார் உயரதிகாரிகள் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த மத்திய குழுவினர், தமிழக அதிகாரிகளுடன் பாதிக்க்பபட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
இந்த மத்தியக் குழுவினர் கணக்கிடும் சேத விவரங்களைப் பொறுத்தே ‘கஜா’ புயல் பாதிப்புக்காக தமிழகத்திற்கு மத்திய அரசு அறிவிக்கும் நிவாரணைத் தொகை அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.