பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸானது, கனடாவின் மேலும் இரண்டு மாகாணங்களுக்கு பர வியுள்ளது.
அதனடிப்படையில் சஸ்காட்செவன்நியூ, பிரன்சுவிக் ஆகிய மாகாணாங்களில் தலா ஒவ்வொரு தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள்.
மேலும், பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லதும், வேகமான பரவலடையும் ஆபத்து நிறைந்ததுமான இந்த வைரஸ் தொடர்பில் கூடுதல் அவதானம் அவசியம் என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த வைரஸ் பிரித்தானியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளிலிருந்தே கனடாவிற்குள் பிரவேசித்தது என்று தற்போது தடமறிதல் செயற்பாட்டாளர்கள் உறுதியாக கூறியுள்ளனர்.
முன்னதாக இந்த வகை தொற்றுடையவர்கள் அல்போர்ட்டா, ஒன்ராரியோ, கல்கேரி, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களில் கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.