ஐ.நா மனித உரிமைகள் பேரவை விவகாரம் தொடர்பாக, தன்னையும் கண்காணிக்கிறீர்களா என்று சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர், எழுப்பியிருந்த கேள்விக்கு சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் றோகண பதிலளித்துள்ளார்.
ஜெனிவா தீர்மானம் தொடர்பாக, பங்களாதேஷ் தூதுவரை, தமது தூதரகத்தில் கனேடியத் தூதுவர் சந்தித்து பேசியுள்ளார் என்று, நேற்று இரண்டு ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
செய்தியாளர்கள் அழைக்கப்படாத அந்தச் சந்திப்பு தொடர்பான தகவல்கள், கசிய விடப்பட்ட நிலையிலேயே, தாங்கள் கண்காணிக்கப்படுகின்றோமா என்று, கனேடிய தூதுவர் கீச்சகத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே, சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண, இதனை மறுத்துள்ளதுடன், இராஜதந்திரிகள் நாட்டில் கண்காணிக்கப்படுவதில்லை என்றும், தெரிவித்துள்ளார்.