மத்திய அரசு திட்டமிட்டே புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கங்கள் தமிழர்களுக்குத் தெரிந்தால் எதிர்ப்புகள் உருவாகும் என்ற நோக்கத்துடனேயே இவ்வாறு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை வெளியிடப்படாமை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே வைகோ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தியாவின் மாநில மொழிகளைப் படிப்படியாகவும் முற்றுமுழுதாகவும் ஒழித்துக்கட்டுவதே புதிய கல்விக் கொள்கையின் முதன்மையான நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளை இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் கற்க வேண்டும் என்பதற்காக ஊக்கத் தொகைகளையும் அறிவித்து பல்லாயிரக் கணக்கான கோடிகளை ஒதுக்கியுள்ளனர் என வைகோ கூறியுள்ளார்.