முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர் போராட்டம் நடத்திவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் மாணவர்கள் சென்று கலந்துரையாடியுள்ளார்கள்.
01.02.19 அன்று முல்லைத்தீவில் காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டம் 695 ஆவது நாளாக தொடர்ந்து வருகின்றது இன்னிலையில் இலங்கையில் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள் சென்று தங்கள் ஆய்வுகளையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தற்பாதைய நிலைப்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்துள்ளார்கள்.