முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் வெவ்வேறு உள்நோக்கங்களுடன் செயற்படுகின்றன…

279

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்கள் வெவ்வேறு உள்நோக்கங்களுடன் செயற்படுகின்றன என்று, சிறிலங்கா அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார்.

தாம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்க விரும்பவில்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“என்னை சந்திப்பதும் விடுவதும் அவர்களது விருப்பம்.

உள்நோக்கத்துடன் செயற்படும் அவர்கள் அதற்கேற்ற மாதிரியே செயற்படுவார்கள்.

நான் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று நினைக்கின்ற போது, அவர்கள் பிரச்சினையை தீராப் பிரச்சினையாக வைத்திருக்க யோசிக்கிறார்கள். அவர்களை நான் வலிந்து அழைக்கவில்லை, அவர்கள் விரும்பினால் வந்து சந்திக்கலாம்.” என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *