காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதுடைய, அருளையா ஜனகராசா என்பவர், சுகவீனமடைந்த நிலையில், யாழ்.போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கை கிடைத்துள்ளதாகவும், அதன்படி, அவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை என்றும். யாழ். போதனா மருத்துவமனைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.