முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா???

208

தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் விவசாயிகள் போராட்டத்தில் ஊடுருவி உள்ளனரா என்பதற்கு மத்திய அரசு, எதிர்வரும் 13 ஆம் திகதி பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பொப்டே (Bobde) தலைமையிலான அமர்வு முன் நடைபெற்றது

இதன்போது போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளதாக வெளியான தகவல் உண்மைதானா என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், போராட்ட களத்தில் தடைசெய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பினர் ஊடுருவி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்றார்.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், விவசாயிகள் போராட்டத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் ஊடுருவி உள்ளனரா என்பது தொடர்பாக மத்திய அரசு நாளை பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *