கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிறிலங்கா காவல்துறையில் பணியாற்றும் தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பரந்தன் சந்திக்கு அண்மையில் உள்ள விவசாய விதைப் பண்ணைக்கு முன்பாக, வீதியில் நின்ற மாட்டுடன் உந்துருளி மோதிய சம்பவத்திலேயே குறித்த காவல்துறை அதிகாரி மரணமடைந்துள்ளார்.
கிளிநொச்சி காவல்நிலையத்தில் கடமையாற்றும் வடமராட்சியை சேர்ந்த 30 வயதுடைய மேரிஜாக்சன் அன்ரனி என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.