கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக சாணக்கியனை களமிறக்க வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் யோசனை முன்வைத்துள்ளார்.
வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சிறிலங்கா தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த யோசனையை கூறியுள்ளார்.
வடக்கு மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசா களமிறக்கப்பட வேண்டும் என்றும், அவரது தலைமையில் இளைஞர்களை களமிறக்க வேண்டும் என்றும் சிறிதரன் யோசனை தெரிவித்துள்ளார்.
சாணக்கியனுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரிப்பார்கள் என்பதால், அவரை களமிறக்கி கிழக்கில் வெற்றியடையலாம் என்றும் சிறிதரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் இந்த யோசனைக்கு எதிர்ப்பு எதையும் வெளியிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.