கிழக்கு மாகாணத்தில், கொரோனா தொற்று நிலைமைகள் மோசமடைந்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில், இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கல்முனை தெற்கு பிரதேசத்தில், 33 தொற்றாளர்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும், பொத்துவிலில் 8 பேரும், ஆலையடிவேம்பு மற்றும் அக்கரைப்பற்றில் தலா மூவரும், சாய்ந்தமருது, மற்றும் வாழைச்சேனையில், தலா ஒருவரும், கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.