கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விட்டுக்கொடுப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் ஆதரவளிக்காது என கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அத்துடன், தனது ஆட்சிக் காலத்தில் இந்தியாவிற்கு கிழக்கு முனையத்தை கொடுக்க அனுமதிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக தற்போது சர்ச்சை நிலவிவரும் நிலையில் மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் கூட்டுக் கோரிக்கையாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்திக் கோரிக்கை அமைந்தது.
ஆனால், கிழக்கு முனையத்தை விடவும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியம் இருந்தது.
எனவே, இவ்விரு நாடுகளிடமும் பணம் இருக்கின்ற காரணத்தினால் புதிதாக நிர்மாணிக்கும் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதில் இந்த நாடுகள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தெரிவித்திருந்ததாக கூறினார்.