முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கூகுள் நிறுவனத்தில் சுந்தர் பிச்சைக்கு மேலுமொரு பதவி!

1515

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 2004ஆம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதன் பின் இவர் 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார்.

இவரின் முயற்சியால் கூகுள் நிறுவனம் வலுவான வளர்ச்சி, கூட்டுமைப்புகள் மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனம் அவருக்கு இயக்குநர் குழுமத்தில் ஒருவராக பதவி உயர்வு அளித்துள்ளது.

மேலும் அவர் கூகுள் நிறுவனத்தின் தலமை அதிகாரியாக தொடர்ந்து செயல்படுவார் என்வும் கடந்த 19 ஆம் திகதியிலிருந்து இந்த நியமனம் செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *