கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் 12 வயது சிறுவன் உள்பட 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த கனமழை காரணமாக 4 மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பாலக்காடு, கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா, கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் மிகப்பலத்த மழை பெய்து வருவதுடன், மலைக் கிராமங்களிலும் மழை பெய்து வருவதால் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க்பபடுகிறது.
மழையுடன் சூறைக்காற்றும் வீசுவதால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் உள்ளதாகவும், பாதிக்க்பபட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.