முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கே.பி.போல் அர்ஜுன் மகேந்திரனும் கொண்டுவரப்படுவாராம் :அடுத்துக் கூறும் அமைச்சர் சரத்

278

கே.பி. என்ற குமரன் பத்மநாதனை அழைத்துவந்தது போல், கோடிக் கணக்கிலான நிதி மோசடியைச் செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் வசிக்கும் ஒருவரை நாட்டுக்கு அழைத்து வரவேண்டுமாயின் அதற்காக இரு நாடுகளுக்கு இடையில் சர்வதேச உடன்படிக்கை ஒன்று இருத்தல் அவசியமாகும்.

இதுதொடர்பாக சர்வதேச பொலிஸ் பிரதானியுடன் நேற்று முன்தினம் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ள அவர், மகேந்திரனை சர்வதேச நியதிகளுக்கு அமைய நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அவரை நாட்டுக்கு அழைத்து வந்து அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *