முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கொரோனாவுக்கு நடுவே சிறிலங்காவில் மற்றுமொரு நோய்த் தொற்று

280

நாட்டில் சுமார் 500 நோயாளிகளுக்கு மணல் பூச்சிகளால் பரவும் தோல் நோயான லீஷ்மேனியாசிஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நோயாளிகள் அநுராதபுர மாவட்டத்திலுள்ள பதவியா, நாச்சதுவா, தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம மற்றும் இபலோகம பகுதிகளில் இருந்து பதிவாகியுள்ளனர்.

லீஷ்மேனியாசிஸ் என்பது உலகின் 9ஆவது மிக ஆபத்தான தொற்று நோயாகும். 97 நாடுகளில் இத்தொற்று நோய் பரவியுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.

இந்த நோய் மணல் பூச்சி மூலம் பரவுவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவரை மணற்பூச்சி கடித்துவிட்டு, ஆரோக்கியமானவரைக் கடிக்கும்போது இந்த நோய் எளிதாகப் பரவுகிறது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *