மருந்தகங்கள் மற்றும் வெளிநோயாளர் பிரிவுகளில் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் அனித்தா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
மூன்று வகை கொரோனா தடுப்பூசி எதிர்வரும் வார இறுதிக்குள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
தற்போதைய சூழலில் கனடிய மக்கள் தொகைக்கு ஏற்ப முற்கூட்டிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் வெகுவிரைவில் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கும் திட்டத்தினை நடைமுறைச்சாத்தியமாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.