கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தில் அரசியல் தலையீடுகள் இல்லாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தரவிட்டுள்ளார்.
அமைச்சரவைப் பேச்சாளரான ரமேஸ் பத்திரன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் அதிக ஆபத்துள்ள கொழும்பு, கம்பகா பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமக்கோ அல்லது தாம் அழைத்துச் செல்பவர்களுக்கோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்றும் அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான அழுத்தங்களுக்கு சுகாதார அதிகாரிகள் அடி பணிய வேண்டாம் என்றும், சுதந்திரமான முறையில் அவர்கள் முடிவெடுக்கலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.