ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து, கொரோனா தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்வது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் பேச்சுக்களை நடத்தி வருவதாக ஜனாதிபதியின் ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
இந்தியாவில் இருந்து, முதல் தொகுதி கொரோனா தடுப்பு மருந்துகளை ஏற்றிய வானூர்தி நாளை காலை கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தை வந்தடையவுள்ளது.
இந்த வானூர்தியில் இரண்டரை இலட்சம் பேருக்குத் தேவையான, 5 இலட்சம் தடுப்பு மருந்துகள் கொண்டு வரப்படவுள்ளன.
தடுப்பூசி போடும் நடவடிக்கை வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படும்.
முதற்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் அடுத்த கட்டமாக, காவல்துறையினருக்கும், அதையடுத்து, இராணுவத்தினருக்கும் தடுப்பூசிகள் போடப்படும்.
ரஷ்யாவிடமும், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவும் தடுப்பு மருந்துகளை கொடையாக வழங்கும் என்று நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவுக்கு 3 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்குவதாக சீனாவும் அறிவித்துள்ளது.
அடுத்த மாத நடுப்பகுதியில் தடுப்பு மருந்துகள் சிறிலங்காவுக்கு விநியோகிக்கப்படும் என்று சீன தூதரகம் தெரிவித்துள்ளது.